இலங்கை
ராணுவத் தளபதிக்கு அமெரிக்கா ஏன் தடை விதித்தது

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
ராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்கா பயணத்தடையை விதித்துள்ளதாக, அமெரிக்காவின் ராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

அமெரிக்க ராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி,
ராணுவ தளபதி சவேந்திர சில்வா அவருடைய கட்டளை பொறுப்பு காரணமாக பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்ற நம்பகத்தன்மை மிக்க தகவல்கள் காரணமாக அவருக்கான தடை அமுலுக்கு வருகிறது.
குறிப்பாக 2009யில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது ராணுவத்தின் 58வது படைப்பிரிவு மேற்கொண்ட சட்டவிரோத கொலைகள் காரணமாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்புடைய திட்டங்கள் ஒதுக்கீட்டு சட்டத்தின் 7031 பிரிவின் கீழ் கோரப்பட்டிருப்பதன் அடிப்படையில் அமெரிக்க ராஜாங்க செயலாளருக்கு வெளிநாட்டு அதிகாரியொருவர் பாரிய மனித உரிமை மீறல்கள் அல்லது பாரிய ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்ற நம்பகத்தன்மை மிக்க தகவல்கள் கிடைத்தால் அந்த நபரும் அவருடைய குடும்பத்தவரும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தகுதியற்றவர்கள் என ராஜாங்க திணைக்களத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்புடைய திட்டங்கள் ஒதுக்கீட்டு சட்டத்தின் 7031 தெரிவிக்கின்றது.
சவேந்திர சில்வாவிற்கு எதிராக தடைவிதிப்பதற்கு அப்பால் அவருடைய குடும்பத்தவரிக்கு எதிராகவும் பயணத்தடை விதிக்கப்படுகின்றது.
ஐ.நா மற்றும் ஏனைய அமைப்புகளும் முன்வைத்துள்ள ஆவணப்படுத்தியுள்ள சவேந்திர சில்வாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் நம்பகத்தன்மை மிக்கவை என குறிப்பிடுகிறது.
இதேவேளை, இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறித்து அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற சட்டவிரோத படுகொலையுடன் சவேந்திர சில்வாவிற்குள்ள தொடர்புகள் காரணமாகவே அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அவர் தகுதியற்றவர் என அறிவித்துள்ளதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
யுத்த குற்றங்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்களிற்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் விடயத்தில் அமெரிக்கா ஒருபோதும் தடுமாறாது என தெரிவித்துள்ளார்.