திருக்கோவில் வலய மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி ஆரம்ப நிகழ்வு….

திருக்கோவில் கல்வி வலயத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வலய மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று (26) காலை 9.00 மணியளவில் திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர் A.நஷீர் தலைமையில் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் அதிதிகள் மலர்மாலை அணிவித்து பேண்ட் வாத்தியம் மற்றும் கடட் அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டு அதனைத்தொடர்ந்து அங்குராப்பண நிகழ்வுகள் கோலாகலமாக முறையில் நடைபெற்றது.
இப் போட்டி நிகழ்வுகளில் திருக்கோவில் வலயத்திற்கு உட்பட்ட 47 பாடசாலைகள் பங்குபற்றுவதுடன்.
நிகழ்வின் பிரதம அதிதியாக திருக்கோவில் கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் R.உதயகுமார் கலந்து சிறப்பித்தார்.
ஏனைய அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான சோ.சுரநூதன், ஏ.நௌபர்டீன், கே.கமலமோகனதாசன் திருக்கோவில் கோட்டக் கல்விப்பணிப்பாளர் எஸ்.ரவீந்திரன் திருக்கோவில், பொத்துவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார் ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப்பணிப்பாளர் கே.கமலமோகனதாசன் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள், பாடசாலை ஆதிபர்கள், பயிற்று விற்பாளர்கள், பாடசாலை ஆசிரியர்கள், உடற் கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
கடந்த வருடம் கிழக்கு மாகாண மட்டத்தில் 2 ஆவது இடத்தைப்பெற்று சாதனைபடைத்தமைக்காக வலயக்கல்விப் பணிப்பாளர் R.உதயகுமார் உடற்கல்விப்கல்விப் பணிப்பாளர்களான K.கங்காதரன், A.நஷீர் உள்ளிட்ட விளையாட்டு துறை உத்தியோகத்தர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மாகாண மட்ட சாதனை வீர வீராங்கனைகள் பரிசு வழங்கிபாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.