இலங்கை
ஊரடங்கு உத்தரவு தொடர்பில் போலியான செய்தி வௌியிட்ட இளைஞன் கைது!

சமூக வலைத்தளங்களின் ஊடாக ஊரடங்கு உத்தரவு தொடர்பில் பொய்யான தகவல்களை வௌியிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
18 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த இளைஞன் ஜனாதிபதி செயலக ஆவணம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் இலட்சினையும் பயன்படுத்தி குறித்த பொய்யான தகவல்களை வௌியிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.