இலங்கை

நாட்டில் இன்று மட்டும் 660 பேர்: மொத்த கொரோனா பாதிப்பு 36,000ஐ கடந்தது!


நாட்டில் இன்று மட்டும் 660 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 47 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 708 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 27 ஆயிரத்து 61பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இன்னும் எட்டாயிரத்து 826 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் இன்று கொரோனா தொற்றினால் ஐவரின் உயிரிழப்பு பதிவாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்புக்கள் 165 ஆக உயர்ந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker