இலங்கை

தமிழ் தேசியக் கட்சிகள் மீண்டும் ஒன்றிணைந்தன!

தமிழ் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டம் யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

தற்போதைய அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பினை வெளியிடும் முகமாக தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.

கடந்த மாதம் அனைத்துக் கட்சிகளின் அழைப்பின் பேரில் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.  இந்நிலையில் தொடர்ச்சியாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன், சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றம் ஏனைய தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதேவேளை, குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முதற்தடவையாக கலந்துகொண்ட நிலையில் அவரது வருகையை அடுத்து ஈழவர் ஜனநாயகக் கட்சியின் தலைவி அனந்தி சசிதரன் கூட்டத்தை விட்டு வெளிநடப்புச் செய்து வெளியேறினார்.

அத்துடன், குறித்த கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வருகை தரவுள்ளார் என்ற தகவலையடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகளும் குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker