இலங்கை

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கான அவசர அறிவிப்பு

கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டால் அதற்காக காவு வண்டியை அழைப்பதற்காக விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் 0113 422 558 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து அம்பியுலன்ஸ் சேவையை பெற்று கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இந்த இலக்கத்திற்கு தொடர்புகொண்டு இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker