சின்னப் பனங்காடு மகாசக்தி எழுச்சி அறநெறி, பாலர் பாடசாலை மாணவர்கள் மனமகிழ்வுடன் கற்பதை ஊக்கிவிக்கும் முகமாக உள் சுவர்களில் கல்வி சம்பந்தப்பட்ட ஓவியங்கள் வரையும் பணி “சத்தியம்” வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினால் முன்னெடுப்பு….

சின்னப் பனங்காடு மகாசக்தி எழுச்சி அறநெறி பாடசாலை மற்றும் பாலர் பாடசாலையில் கவடாப்புட்டி , புளியம்பத்தை , பனங்காடு , மகாசத்தி கிராமத்தைச் சேர்ந்த பல குழந்தை மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இவ் அறநெறி பாடசாலை மற்றும் பாலர் பாடசாலை மாணவர்களின் நீண்ட கால தேவையாக இருந்த அடிப்படை வசதிகளையும் , மாணவர்களுக்கு கல்வி கற்றலுக்குரிய சிறப்பான , மகிழ்வான சூழலையும் ஏற்படுத்தி மனமகிழ்வுடன் கற்பதை ஊக்குவிக்கும் முகமாக உள் சுவர்களில் கல்வி சம்பந்தப்பட்ட அழகிய ஓவியங்கள் வரையும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
“சத்தியம் “ (லண்டன்) வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பின் ஸ்தாபகர் சத்தியமூர்த்தி அவர்கள் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு கல்வி சார்ந்து பல்வேறுபட்ட பல உதவிகளை தொடர்சியாக செய்து வருவதுடன்.
“சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பின் ஸ்தாபகர் சத்தியமூர்த்தி அவர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக லண்டனில் வசிக்கும் சமூக நலன் விரும்பியின் ஆதரவோடு “சத்தியம்” வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பு சுவர்னராஜ் அவர்களின் மேற்பார்வையில் குறித்த அபிவிருத்தி வேலைத்திட்டம் நேற்றய தினம் (10) ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த வேலைத்திட்டம் மிக விரைவில் நிறைவடைந்து அறநெறி , பாலர் பாடசாலை மாணவர்கள் பயன்பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.