இலங்கை
ஜெனிவா விவகாரம்! கல்வியமைச்சர் விடுத்துள்ள அழைப்பு

ஜெனிவா தீர்மானங்களுக்கு எதிராக படைவீரர்களை காப்பாற்ற மற்றும் நாட்டின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் பாதுகாப்பதற்காக ஒரு நாடாக இலங்கையர்கள் ஒன்றுபட வேண்டும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
பத்தரமுல்லையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேரத்திற்குள், இலங்கையைப் பற்றி அறிய 13 புதிய நியமனங்களுக்கான அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த அறிக்கைகளில் உள்ள வெளிப்படைத்தன்மை குறித்து கேள்வியெழுப்பிய எதிர்க்கட்சிகள் கூட நாட்டிற்காக நிற்க வேண்டும்.
மேலும் 10 ஆண்டுகளாக நடைமுறையில் இல்லாத சட்டங்களை உருவாக்க, திருத்த அல்லது மாற்ற வேண்டிய நேரம் இது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.