இலங்கை
சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறக்கப்படும்

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகள் நாளை (12) மீண்டும் திறக்கப்படவுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
இந்நிலையில் நாளை மீண்டும் கல்விநடவடிக்கைகள் ஆரம்பமாகும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளார்.