இலங்கை

சீன நிறுவனத்திடம் இருந்து உரங்களை இறக்குமதி செய்வதற்கான தடை இராஜதந்திர பிரச்சினை அல்ல – அரசாங்கம்

சீன நிறுவனத்திடம் இருந்து உரங்களை இறக்குமதி செய்வதற்கான தடை இராஜதந்திர பிரச்சினை அல்ல என்று அரசாங்கம் இன்று வலியுறுத்தியுள்ளது.

இந்த விடயம் குறித்து அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், சீன நிறுவனத்திடமிருந்து கரிம உரங்களை இறக்குமதி செய்வதை தடை செய்யும் முடிவை எதிர்த்து மேன்முறையீடு செய்ய முடியுமென தெரிவித்தார்.

எந்த நிறுவனமும் மேன்முறையீடு செய்யலாம் என்றும் அதுதான் ஜனநாயகம் என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த விடயம் இலங்கையர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உள்ளடக்கியது என்றும் இராஜதந்திர பிரச்சினையாக பார்க்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உரங்களில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், சீன நிறுவனத்திடமிருந்து கரிம உரத்தை இறக்குமதி செய்ய முடிவு எடுக்கப்படவில்லை என்று விவசாய அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது.

இதனையடுத்து, சீன நிறுவனத்திடமிருந்து கரிம உரங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக அறிவியல் மற்றும் உண்மைகளை மதிக்குமாறு சீனா சமீபத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker