உலகம்

சீனா அதிக விளைவுகளை சந்திக்க நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் சீனாவுக்கு தெரிந்தே பரப்பப்பட்டது என்றால் அந்தநாடு அதிக விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

உலகில் உள்ள 200 க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு இந்த தாக்கம் காரணமாக பொருளாதார பாதிப்பையும் உயிரிழப்பையும் இந்நாடுகள் சந்தித்து வருகின்றன.

இந்த நிலையில் சீனாவின் வுகான் பரிசோதனை கூடத்திலிருந்து இந்த வைரஸ் பரவியதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் வைரஸ் பரவியது குறித்து டொனால்ட் ட்ரம்ப் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் நேற்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர், “வைரஸ் பரவியதை சீனா ஆரம்ப கட்டத்திலேயே தடுத்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை. இதனால் ஒட்டுமொத்த உலகமே தற்போது பாதிக்கப்பட்டு வருகிறது.

தற்போது கொரோனா வைரஸ் குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணையில் சீனாவுக்கே தெரியாமல் அந்த வைரஸ் தவறாக வெளியே வந்துவிட்டிருந்தால் தவறு, தவறு என்றாகிவிடும். ஒரு வேளை சீனாவுக்கு தெரிந்தே வேண்டுமென்றே பரப்பியதாக கண்டுபிடிக்கப்பட்டால் அதிக விளைவுகளை அந்த நாடு சந்திக்க நேரிடும்.

சீனாவையும் மீறி தவறுதலாக அந்த வைரஸ் வெளியே வந்துவிட்டதா அல்லது வேண்டுமென்றே வெளியே பரப்பப்பட்டதா. இவை இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. அவர்களும் வைரஸ் பரவியது குறித்து விசாரணை நடத்த்தப்படும்

அவர்களது விசாரணை முடிவுகள் என்ன வருகிறது என்பதை பார்ப்போம். நாங்களும் விசாரித்து வருகிறோம். அந்த நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 0.33 சதவீதமாக உள்ளதாக கூறுவதே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker