இலங்கை

இலங்கையில் 4 வருடங்களுக்குள் பால்மா இறக்குமதி நிறுத்தப்படும் : அரசாங்கம் அறிவிப்பு!!


அடுத்து வரும் நான்கு வருடங்களுக்குள் வெளிநாடுகளில் இருந்து பால் மா இறக்குமதி செய்யப்படுவதை நிறுத்துவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

பால் உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்து, திரவப் பால் பயன்பாட்டை மக்களிடையே ஊக்குவிக்கும் நோக்கிலேயே பால் மா இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது நியூசிலாந்தில் இருந்து அதிகளவில் பால் மாவை இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருக்கின்றது எனவும்,நாளொன்றுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பால் மா இறக்குமதி செய்யப்படுகின்றது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதனால் பால் உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்து நாட்டுப் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசு எதிர்பார்க்கின்றது எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, பயறு, கச்சான், எள்ளு உள்ளிட்ட உற்பத்தியில் ஏற்கனவே இலங்கைதன்னிறைவு அடைந்துவிட்டது எனவும், இதேபோன்று மற்றைய உணவுப் பொருள் உற்பத்தியிலும் தன்னிறைவு அடைந்ததும்,

அந்தப் பொருட்களின் இறக்குமதியை நிறுத்துவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது எனவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker