இலங்கை

சவேந்திர சில்வாவின் நியமனம் தேசிய ஒருமைப்பாட்டுக்கான முயற்சிகளைக் குறைத்துக் காண்பிக்கிறது – ஐரோப்பிய ஒன்றியம்

இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமையானது தேசிய ஒருமைப்பாடு குறித்து இலங்கை காண்பிக்கும் முயற்சிகளைக் குறைத்துக் காண்பிப்பதுடன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் பிழைத்து வாழும் பொதுமக்களுக்கும் கவலையளிக்கும் தகவலை வழங்குவதாக அமைந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருக்கிறது.

Image result for ஐரோப்பிய ஒன்றியம்

சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் நேற்று செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

மனித உரிமை மீறல் தொடர்பான பாரதூரமான குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகியிருக்கும் லெப்டினென் ஜெனரல் சவேந்திர சில்வாவை இலங்கையின் இராணுவத் தளபதியாக நியமித்துள்ளமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் நிலைப்பாட்டை நாங்களும் பகிர்ந்துகொள்கின்றோம்.

சவேந்திர சில்வாவிற்கு இராணுவத் தளபதியாகப் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளமையின் மூலம் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் 2019 மார்ச் மாதத்தில் இலங்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கியிருந்த வாக்குறுதி தொடர்பில் தற்போது சிக்கல்நிலை தோன்றியுள்ளது.

அத்துடன் தேசிய ஒருமைப்பாடு குறித்து இலங்கை காண்பிக்கும் முயற்சிகளைக் குறைத்துக் காண்பிப்பதுடன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் பிழைத்து வாழும் பொதுமக்களுக்கும் கவலையளிக்கும் தகவலை வழங்குவதாக அமைந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker