இலங்கை

சுற்றுலாத் துறையை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை

சுற்றுலாத் துறையை மேம்படுத்த  அரசாங்கம் நடவடிக்கை

நல்லாட்சி அரசாங்கம் பாதுகாப்பை குறைத்து மதிப்பிட்டதால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் சீர்குலைந்த சுற்றுலாத் துறையை கொரோனா சவாலுக்கு மத்தியிலும் முன்னேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக அமைச்சர் கூறினார்.

பலப்பிற்றிய தொகுதியில் குழு கூட்டங்களில் நேற்று கலந்துகொண்டு அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

கொரோனா தொற்று நிலமையிலும் சுற்றுலாத் துறையை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் நாளுக்கு நாள் வீழ்ச்சி கண்ட நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்தவர்கள் தற்போது அதை மறந்து அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker