ஆலையடிவேம்பு

கோளாவில் பெருநாவலர் வித்தியாலய மாணவர்களுக்கு இலவச பாடநூல் வழங்கும் மற்றும் தரம் 05 மாணவர்களின் விடுகை விழா நிகழ்வு….

 

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, கோளாவில் பெருநாவலர் வித்தியாலய மாணவர்களுக்கான இலவச பாடநூல் வழங்கும் நிகழ்வு மற்றும் தரம் 5 மாணவர்களின் விடுகை விழா நிகழ்வுகள் சிறந்த முறையில் பாடசாலையின் அதிபர் ஸ்ரீ.மணிவண்ணன் அவர்களின் தலைமையில் தரம் 4 மாணவர்களின் பெற்றோர்களின் பங்களிப்புடன் இன்று (16) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் பாடசாலையில் இடம்பெற்றது.

இன் நிகழ்வின் அதிதிகளாக ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி.M.மயூரன், பிரதிக்கல்வி பணிப்பாளர் கங்காதரன், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் W.D வீரசிங்க அவர்களின் ஆலையடிவேம்பு இணைப்பாளர் P.சிந்துஜா ஆகியவர்கள் கலந்து சிறப்பித்ததுடன். ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வில் தரம் 5 இல் கல்வி கற்று தரம் 6 இல் கல்வி கற்க வேறு பாடசாலைக்கு செல்லவுள்ள மாணவர்களுக்கு அதிபர் மற்றும் அதிதிகளால் பரிசுப்பொருள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கான இலவச பாடநூல்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker