ஆலையடிவேம்பு

கோளாவில் பெருநாவலர் வித்தியாலய, சிவசக்தி அறநெறி மாணவர்களின் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை நிகழ்வு….

சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகளின் குருபூஜை தின நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச, கமு/திகோ/கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சிவசக்தி அறநெறி மாணவர்களினால் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை நிகழ்வு நேற்று (29) இடம்பெற்றது. இதற்கான ஒழுங்கமைப்புக்களை ஆலையடிவேம்பு இந்துமாமன்றம் மேற்கொண்டிருந்தது.

சுந்தரமூர்த்தி நாயனார் அவர்களின் சிறப்புக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் அறநெறி கல்வியினை ஊக்குவிக்கும் முகமாகவும் குறித்த நிகழ்வு திறன்பட இடம்பெற்றிருந்தது.

சிவசக்தி அறநெறி மாணவர்கள் சுந்தரமூர்த்தி நாயனாரின் உருவப்படம் தாங்கிய பல்லக்கை சுமந்து நாயனாரின் தேவாரங்களை பாடி ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிள்ளையார் ஆலயத்தில் இருந்து குறித்த பாடசாலையை வந்தடைந்து நிகழ்வுகள் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் தலைவர் வே.சந்திரசேகரம் (JP) அவர்கள் தலைமையில் இடம்பெற்ற குரு பூஜை வழிபாடுகளில் சுவாமி நித்தியானந்த சரஸ்வதி மகராஜ் அருளாளராக கலந்து கொண்டதுடன், பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாரகன், கௌரவ அதிதிகளாக ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ கணேசன், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தலைவர் அருள்ராஜா, மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஜெயராஜி, ஓய்வு நிலை அதிபர் கனகரெத்தினம், சமூக செயற்பாட்டாளர் வாமதேவன், பிரதேச அபிவிருத்தி வங்கி உத்தியோகத்தர் சரவணன், பிரதேச கலாசார உத்தியோகத்தர் சர்மிளா பிரசாத் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் செயலாளர் மற்றும் பாடசாலை அதிபர் ஸ்ரீ மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் நிகழ்வில் சமூகத்திற்கு அரும்பணியாற்றிய பிரதேச செயலாளர் வி.பபாகரன், சமூக பெரியார்கள் இந்துமாமன்ற உறுப்பினர்கள் என பலர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker