மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுமா? – இன்று அறிவிப்பு


மேல் மாகாணத்தில் அமுலாகும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீக்குவது குறித்து, கொவிட் தொற்றுப் பரவலை ஆராய்ந்த பின்னரே தீர்மானிக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவலையடுத்து, கடந்த 29ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுலானது. இதனை நாளை அதிகாலை 5.00 மணிக்கு நீக்குவதென முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் கிடைக்கும் அறிக்கைகளை முறையாகப் பரிசீலித்த பின்னரே இது தொடர்பான உறுதியான தீர்மானத்தை எட்ட முடியுமென அவர் குறிப்பிட்டார்.
கம்பஹா, கொழும்பு மாவட்டங்களின் பல இடங்களில் தொற்றாளர்கள் இனங்காணப்படுகிறார்கள். இந்தத் தொற்று மேலும் பரவக்கூடுமா என்பதை அவதானிக்க வேண்டுமென்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிபொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் கூறினார்.



