வாழ்வியல்

கொரோனா வைரஸ் பாதித்தால் ஒருவரிடம் எத்தனை நாள் இருக்கும் – சீன வைத்தியர்கள் வெளியிட்ட தகவல்

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
சீனாவில் உருவான கொரோனா வைரஸ்  தற்போது உலகம் முழுவதும்  பரவி வருகிறது.  இந்நிலையில் கொரோனா வைரஸ் ஒருவரது உடலில் பரவியிருந்தால் முதலில் தெரியாது. அது பாதித்த 14 நாளுக்கு பிறகுதான் அறிகுறிகளை காட்ட தொடங்கும். அதுபோல அதை குணப்படுத்திய பிறகும் சில நாட்களுக்கு அதன் பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்  2 வாரத்துக்கு கண்டிப்பாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது உலகம் முழுக்க வைத்தியர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஒருவரை கொரோனா பாதித்தால் அவரிடம் குறைந்தபட்சம் 37 நாள் அது வீரியத்துடன் இருக்கும் என்று சீன வைத்தியர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
20 நாளுக்கு பிறகுதான் அதன் அறிகுறி தெரியும். அதன் பிறகு 20 நாள் கவனமாக இருக்க வேண்டும் என்று சீன வைத்தியர்கள்  எச்சரித்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த காய்ச்சலில் இருந்து மீண்டு வர சில மாதங்களாவது ஆகும் என கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker