இலங்கை

கொரோனா வைரஸை அழிக்கக்கூடிய இயந்திரம் கண்டுபிடிப்பு : இலங்கை இளைஞன் அபாரம்!!

உலக நாடுகளுக்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரஸை அழிக்கக்கூடிய இரண்டு இயந்திரங்களைக் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

காற்றிலுள்ள வைரஸ்கள் மற்றும் பக்டீரியாக்களை சில நொடிகளில் அழிக்கும் அதிவேக (virus air burnable automatic machine) தானியங்கி இயந்திரம் மற்றும் பணம், ஆவணங்களில் காணப்படும் வைரஸ்கள் மற்றும் பக்டீரியாக்களை அழிக்கும் தானியங்கி கிருமித்தொற்று நீக்கிக் கருவி ஆகியவை அவரது கண்டுபிடிப்புகளில் அடங்குகின்றன.

பொரளை சுசமவர்தன மகா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை கற்ற குறித்த இளைஞர், கொழும்புப் பகுதியில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்றில் மோட்டார் பொறியியல் பயின்றார்.

அதன் பின்னர் ஜப்பான் சென்று மோட்டார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் தைக் கற்றதுடன் மலேசியாவிலும் இயந்திரப் பிரிவில் அவர் பயிற்சி பெற்றவர் எனவும் கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker