இலங்கை
மொனறாகலை மாவட்ட சரஸ்வதி வித்தியாலயத்தில் இணைந்த கரங்கள் அமைப்பினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு…

மொனறாகலை மாவட்ட மொ/சரஸ்வதி வித்தியாலயத்தில் இருந்து மாகாண மட்ட விளையாட்டு போட்டிகளில் பங்கு பற்றி தேசிய மட்டத்திற்கு தெரிவாகிய மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது நேற்று (05) பாடசாலையின் அதிபர். திரு.எம்.சுதாகரன் அவர்களின் தலமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் மொனறாகலை மாவட்ட வலயக்கல்வி அலுவலக சுகாதார உடற்கல்வி பாட வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.பண்டார அவர்களும், மொனறாகலை பொலிஸ் நிலையப் பிரிவு அதிகாரி சில்வா, பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு.கநேசலிங்கம் மேலும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.