இலங்கை

இதுவரையில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளான பகுதிகள் – முழு விபரம்

நாட்டில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று அதிகரித்ததை அடுத்து இதுவரையில் 24 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

9 மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குருணாகல் மாவட்டம்

கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவில் தித்தவெல்லகல கிராம சேவகர் பிரிவு மற்றும் நிராவிய கிராம சேவகர் பிரிவு.

வெல்லவ பொலிஸ் பிரிவில் நிகதலுபொத்த கிராம சேவகர் பிரிவு.

மேலும் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவு.

கம்பஹா மாவட்டம்

கொட்தெனியாவ பொலிஸ் பிரிவில் பொல்ஹேன கிராம சேவகர் பிரிவு, ஹீரலுகெதர கிராம சேவகர் பிரிவு மற்றும் களுஅக்கல கிராம சேவகர் பிரிவு.

மினுவங்கொட பொலிஸ் பிரிவில் அஸ்வென்னவத்த கிழக்கு கிராம சேவகர் பிரிவு.

களுத்துறை மாவட்டம்

மீகஹதென்ன பொலிஸ் பிரிவில் மிரிஸ்வத்த கிராம சேவகர் பிரிவு, பெலவத்த வடக்கு கிராம சேவகர் பிரிவு மற்றும் பெலவத்த கிழக்கு கிராம சேவகர் பிரிவு.

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் அதிகாரிகொட கிராம சேவகர் பிரிவு.

திருகோணமலை மாவட்டம்

திருகோணமலை பொலிஸ் பிரிவில் பூம்புகார் கிராம சேவகர் பிரிவு.

காலி மாவட்டம்

ரத்கம பொலிஸ் பிரிவில் இம்புலகொட கிராம சேவகர் பிரிவு மற்றும கடுதம்பே கிராம சேவகர் பிரிவு.

பொலன்னறுவை மாவட்டம்

ஹிங்குரக்கொட பொலிஸ் பிரிவில் சிறிகெத கிராம சேவகர் பிரிவு.

மாத்தளை மாவட்டம்

உக்குவளை பொலிஸ் பிரிவில் பல்லேகும்புர கிராம சேவகர் பிரிவு.

நாஉல பொலிஸ் பிரிவில் அலுகொல்ல கிராம சேவகர் பிரிவு.

மொனராகல மாவட்டம்

வெல்லவாய பொலிஸ் பிரிவில் வெல்லவாய நகர் கிராம சேவகர் பிரிவு, வெஹரயாய கிராம சேவகர் பிரிவு மற்றும் கொட்டம்கஹபொக்க கிராம சேவகர் பிரிவு

புத்தல பொலிஸ் பிரிவில் ரஹதன்கம கிராம சேவகர் பிரிவு.

அம்பாறை மாவட்டம்

உகன பொலிஸ் பிரிவில் குமாரிகம கிராம சேவகர் பிரிவு.

இதேவேளை தம்புள்ள பொருளாதார மத்திய நிலையமும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker