இலங்கை
கிராமத்தை அபிவிருத்தி செய்தலின் உரையாடல் மூலம் பெற்றுக்கொள்வதற்கான விசேட கூட்டம் காரைதீவில் இன்று…

பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் கீழ் கிராமத்தை அபிவிருத்தி செய்தலின் உரையாடல் மூலம் பெற்றுக்கொள்வதற்கான விசேட கூட்டம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் காரைதீவு 6ம் பிரிவு பல் தேவை கட்டடத்தில் இடம்பெற்றது இன் நிகழ்வில்
காரைதீவு பிரதேச திட்டமிடல் பணிப்பாளர் எல்.மோகனகுமார்,காரைதீவு பிரதேச சபையின் முன்னால் தவிசாளரும் அம்பாறைமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல வீர திசாயநாயக்க அவர்களின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் திரு.ஜிவராஜா அவர்களும் காரைதீவு பிரதேச தொழில்நுட்ப உத்தியோகத்தர் சுந்தரலிங்கம்,மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சாயி லோஜினி ,கிராம உத்தியோகத்தர்,கிராமசேவக பிரிவு குழுக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.