இலங்கை

மே 9 சம்பவம் – மஹிந்த கஹந்தகம குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரண்!

கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்துள்ளார்.

கடந்த மே மாதம் 09ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற சம்பவங்களில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டிருந்த மஹிந்த கஹந்தகமவே இவ்வாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்துள்ளார்.

அமைதி  போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தச் சென்ற கும்பலில் இருந்ததாக அடையாளம் காணப்பட்ட மஹிந்த கஹந்தகமவிற்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker