விளையாட்டு

ஐ.பி.எல்.இல் விளையாடுவதற்கு பீட்டர்சன் தான் இங்கிலாந்து வீரர்களுக்கு பாலம் அமைத்துக் கொடுத்தவர்!

கெவின் பீட்டர்சன் தான் இங்கிலாந்து வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்கு பாலம் அமைத்துக் கொடுத்தவர் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஐ.பி.எல். தொடரினால் வளர்ந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஐயமே இல்லை, சந்தேகமின்றி இங்கிலாந்து கிரிக்கெட் ஐ.பி.எல். தொடரினால் வளர்ந்துள்ளது. அதில் விளையாடியே தீர வேண்டும் என்பதே என் ஆசை. ஐ.பி.எல். கிரிக்கெட்தான் உலகின் சிறந்த தொடர். அதாவது உலகக் கிண்ண தொடர்கள் நீங்கலாக.

ஐ.பி.எல். தொடரில் சில சவால்கள் மிகப்பிரமாதமானவை, உதாரணமாக றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கோஹ்லி, டிவில்லியர்ஸ், கெய்ல் ஆகியோர் டேல் ஸ்டெய்ன், ஜஸ்பிரிட் பும்ராவை, மாலிங்கவை எதிர்கொள்ளும் சுவாரஷ்யம், வளர்ச்சியுறும் ஒரு குழந்தையாக அத்தகைய கிரிக்கெட்டைத்தான் விளையாட விரும்புவோம், கற்பனை கிரிக்கெட். அனைத்து அணிகளையும் கலந்து விடுங்கள் கோஹ்லி, டிவில்லியர்ஸ் சேர்ந்து விளையாடுவதைப் பார்ப்பது எத்தனை சுவாரஷ்யம்.

இங்கிலாந்து கிரிக்கெட் ஐபிஎல்-உடன் ஒரு சுவாரஷ்யமான வரலாறு கொண்டது. கெவின் பீட்டர்சன் குறித்த ஆவணப்படம், அவர் எப்படி இதில் ஈடுபட விரும்பினார், அவர் சந்தித்த இடையூறுகள். கெவின் பீட்டன்சன் உண்மையில் நாங்களெல்லாம் ஐ.பி.எல் விளையாடுவதற்கு பாலம் அமைத்துக் கொடுத்தவர். வளரும் கிரிக்கெட் வீரர்களுகு ஐ.பி.எல். எவ்வளவு முக்கியம் என்பதை பீட்டர்சன் உணர்ந்திருக்கிறார்’ என கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker