காரைதீவு கண்ணகி வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு…

காரைதீவு கண்ணகி வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு. திருக்குமார் தலைமையில் இன்று (07) காலை 9.00 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இணைந்த கரங்கள் உறவுகளின் நிதி பங்களிப்போடு அனைவரின் ஆதரவோடும்
(66) மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், மற்றும் அதி கஷ்டத்திலுள்ள (26) மாணவர்களுக்கும்
புத்தகப்பைகள், மற்றும் பாதணிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.
இன் நிகழ்விற்கு பிரதம அதிதியாக காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயலத் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
மேலும் பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி.மிதுளா மணிமாறன், ஆசிரியர்களான எஸ். உதயநாதன், எஸ்.பாஸ்க்கரன், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஏழை மாணவர்களின் கல்விக்கு தொடர்ந்தும் உதவிக்கரம் நீட்டி வரும் இணைந்த கரங்கள்
இணைப்பாளர்களான லோ.கஜரூபன், சி.காந்தன், ந.சனாதனன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.