ஆலையடிவேம்பு

அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி கற்று இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு….

-காந்தன்-

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி கற்று 2020 ஆண்டு உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (17) புதன்கிழமை பாடசாலையின் அதிபர் திரு.J.R.டேவிட் அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கௌரவிப்பு நிகழ்வில் 2020 ஆண்டு உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் பாடசாலைக்கு வருகைதந்ததுடன் பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்த மாணவர்களை கௌரவித்ததுடன் தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker