காரைதீவில் மேற்கொண்ட 25 பேருக்கான அண்டிஜென் பரிசோதனை: 10 PCR பரிசோதனை இன்றும் ஒருவர் தொற்றுள்ளவராக அடையாளம்!

இன்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று மேற்கொண்ட 26 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகளில் ஒருவர் மட்டும் தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டதுடன் ஏனைய அனைத்து பரிசோதனை முடிவுகளும் நெகட்டிவாக வந்துள்ளது. அதனுடன் 10 PCR மாதிரிகள் எடுக்கப்பட்டன. என்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க எமது அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீர் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்,அபிவிருத்தி உத்தியோகத்தர் இணைந்து மேற்கொள்ளப்பட்ட 26 பேருக்கான அண்டிஜென் பரிசோதனை ஒரு நபருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனுடன் 10 PCR மாதிரிகள் எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது .