இலங்கை

ஊரடங்கு தொடர்பான அறிவிப்பொன்று!

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) அதிகாலை ஐந்து மணிமுதல் அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவு மீள் அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

மினுவாங்கொட கொரோனா கொத்தணியைத் தொடர்ந்து வைரஸ் தொற்று அதிகமுள்ள இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவரும் நிலையிலேயே கட்டுநாயக்க பகுதியிலும்  ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் தமது அலுவலக அடையாள அட்டையினை ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியில் ஊரடங்கு அனுமதிச்சீட்டாக பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஷ

மேலம், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களிடையே கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker