ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் ஆலய சூர சம்ஹாரம் நிகழ்வு

முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். இந்த விரதத்தின் இறுதி நாளான இன்று சூரபத்மன் முருகப்பெருமானுடன் போர் புரிந்து இறுதியில் சேவலும் மயிலுமாக மாறிய வரலாற்றினை கொண்ட கந்தசஷ்டி விரத்தின் மகிமையினை இன்று அனைத்து முருகன் ஆலயங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பக்தர்கள் ஆறு நாட்கள் உணவின்றியும் ஒருவேளை உணவருந்தியும் முருகனை நினைத்து விரதமிருப்பார்கள்.

அந்த வகையில் இன்றைய தினம்(2019.11.02 )ஆலையடிவேம்பு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் ஆலயத்தில்  மாலை   வேளையில் சூரன்போர் நடைபெற்றது. இதன்போது முருகனுடன் சூரன் போர் புரிவதற்காக எவ்வாறான அவதாரங்களை எடுத்தார் என்ற கதையினை எடுத்தியம்பக்கூடியதாக இன்று  ஆலய வெளி வீதியில்  வெகுசிறப்பாக  சூரன்போர் நடைபெற்றது இதன் போது பெரும் திரளான பக்கத்தர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker