ஆலையடிவேம்பு

கண்ணகி கிராமத்தின் மாதர் சங்க பாலர் பாடசாலையின் பெயர் பலகை திறந்து வைப்பு….

ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகி கிராமத்தில் இயங்கி வரும் மாதர் சங்க பாலர் பாடசாலைக்கு தேவையான பெயர் பலகை திறப்பு மற்றும் இரண்டு ஆசிரியர்களுக்கு சிறு கொடுப்பனவும் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்றயதினம் முன்பள்ளி வெளிக்கள உத்தியோகத்தர் பி. மோகனதாஸ், திகோ/கண்ணகி வித்தியாலய அதிபர் த.இராசநாதன், கண்ணகி கிராமம் சமூக சேவையாளர் கோகுலன் அவர்களுடன் இணைந்த கரங்கள் உறுப்பினர்களான காந்தன் மற்றும் சுரேஸ் ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் குறித்த பாடசாலையில் கல்வி கட்கும் 20 மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்களையும் வழங்குமாறு பாடசாலை சமுகத்தினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இணைந்த கரங்கள் உறவுகளோடு இணைந்து பயணிக்கும் தருஷன், புவனேஸ்ராஜா ஆகியோரினுடைய நிதி பங்களிப்பில் இவ் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker