ஆலையடிவேம்பு

உயர்தர பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப்பெற்ற மாணவி ல.பிரேம்சனா அவர்களை கௌரவப்படுத்தலும் மற்றும் பாராட்டும் நிகழ்வு Alayadivembuweb.lk இணையக்குழுவினரின் ஏற்பாட்டில்….

Alayadivembuweb.lk இணையக்குழுவினரின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச பனங்காட்டை பிறப்பிடமாக கொண்ட க.பொ.த உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப்பெற்ற மாணவி லவன் பிரேம்சனா அவர்களை கௌரவப்படுத்தலும் மற்றும் பாராட்டும் நிகழ்வு நேற்று (02.09.2022) மாலை சாதனை மாணவி ல.பிரேம்சனா அவர்கள் இல்லத்தில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் திகோ/புனித சவேரியார் வித்தியாலய அதிபர், ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற செயலாளர் ஶ்ரீ.மணிவண்ணன் மற்றும் இயன் மருத்துவர் க.ஹரன்ராஜ் அவர்களும் கலந்து சிறப்பித்து இருந்தார்கள்.

2021.க.பொ.த.உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி சாதனை மாணவி ல.பிரேம்சனா கலைப்பிரிவில் 3 ஏ சித்தியினை பெற்றதுடன் மாவட்ட மட்டத்தில் முதல் நிலையை பெற்று தங்கள் பிரதேசத்திற்கும் தனது குடும்பத்திற்கும் ஆரம்ப பாடசாலைக்கல்வி பயின்ற பனங்காடு பாசுபதேசுவர வித்தியாலயத்திற்கும் உயர்தர கல்வியை கற்ற அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலைக்கும் பெருமை தேடி கொடுத்துள்ளார்.

மாணவி லவன் பிரேம்சனா அவரது எதிர்கால கல்வி வாழ்க்கை மேலும் முன்னோக்கி கொண்டுசெல்ல சமூகத்தினராகிய எமது ஒத்துழைப்பின் தேவைப்பாடு காணப்படுகின்றது. ஒத்துழைப்பு ஒத்தாசைகளை நாம் அனைவரும் இணைந்து வழங்கி இந்த மண்ணிற்கு தேவையான ஒரு சிறந்த கல்விமானை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.

முடிந்தவர்கள் வாழ்த்தலாம் மற்றும் தங்களால் இயன்ற ஒத்துழைப்புக்களை வழங்கலாம்.

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker