சமூக இடைவெளியை பேணி 5ம் தர புலமை பரிசில் பரீட்சை…

வி.சுகிர்தகுமார்
5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை இன்று காலை நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகின.
அம்பாரை மாவட்டத்திலும் பல்வேறு பரீட்சை நிலையங்களில் சமூக இடைவெளியை பேணி பரீட்சை இடம்பெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பரீட்சை நிலையங்கள் யாவும் தொற்று நீக்கம் செய்யப்பட்டிருந்தன.
முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கெரரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பரீட்சை நிலையங்களுக்கு மாணவர்களும் ஆசிரியர்களும் சென்றதை அவதானிக்க முடிந்தது.
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை நிலையத்திற்கு முன்பாக பரீட்சையில் தோற்றுவதற்காக இன்று காலை ஆர்வத்துடன் பெற்றோர்களுடன் மாணவர்கள் காத்திருந்ததை காண முடிந்தது.
இறைவழிபாட்டில் ஈடுபட்ட மாணவர்கள் ஆலய குருமாரின் ஆசியை பெற்றுக் கொண்டதுடன் பெற்றோர்களையும் வணங்கி பரீட்சை நிலையத்தினுள் நுழைந்ததையும் இங்கு அவதானிக்க முடிந்தது.