இலங்கை

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

92 ஒக்டேன் பெற்றோல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது .

இது தொடர்பில் சந்தைப்படுத்தல் முகாமைத்துவ பிரிவு, கடந்த 5ஆம் திகதி மாத்திரம் நாடளாவிய ரீதியில் 472 தாங்கிகள் மூலம் 60 இலட்சம் லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இதேவேளை, எரிபொருளின் தரம் தொடர்பில் 0115 234 234 மற்றும் 0115 455 130 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு, நுகர்வோர் முறைப்பாடுகளை வழங்க முடியும் எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker