இலங்கை

கிழக்கு மகாண ஆளுநர் – மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கிடையில் சந்திப்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று  நேற்று (புதன்கிழமை) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கே. கருணாகரன் கடமையைப் பொறுப்பேற்றதன் பின்னர் ஆளுநருடனான உத்தியோகபூர்வ முதலாவது சந்திப்பு இதுவாகும்.

இதன்போது ஆளுநர் மக்கள் காலடிக்குச் சென்று மக்கள் சந்திப்பை மேற்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் ஆளுநரின் மக்கள் சந்திப்புக் காரியலயமும் பார்வையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker