இலங்கை

எனது வாக்குவங்கியையும் அதிகரிக்க வேண்டும்: என்னையும் கைதுசெய்யுங்கள் – மனோ

அரசாங்கத்தால் கைது செய்யப்படுபவர்களின் வாங்கு வங்கி அதிகரிப்பதால், தன்னையும் அரசாங்கம் கைது செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வேட்டையாடும் நடவடிக்கையைக் கைவிட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அவர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், மத்திய வங்கி பிணைமுறி தொடர்பாக விசாரணையை நடத்துமாறும் அர்ஜூன மகேந்திரணை சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு கொண்டுவருமாறும் தெரிவித்த அவர், அவ்வாறு விசாரணை செய்யுமிடத்தில் நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்த அழுக்கை விட அதற்கு முன்னைய அரசாங்கத்தில் இருந்த பெருமளவான அழுக்குகளும் வெளிவரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் வழக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய தோட்டத் தொழிலாளர்களுக்கு வழக்கப்படுவதாகத் தெரிவித்த ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அரசாங்கத்தை கோரியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker