இலங்கையில் தாயாரின் விபரீத பழக்கத்தால் சிறுமிக்கு நடந்த கொடூரம்.. துடிதுடிக்க அரங்கேறிய கொடூரம்!!

அண்மையில் புத்தளத்தில் பாம்பு தீண்டி உயிரிழந்ததாக தாயாரால் கூறப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி, தொடர்பில் பல திடுக்கிடும் உண்மை தகவல்கள் பொலிசாரின் விசாரணைகளின் போது வெளியாகியுள்ளன.
புத்தளம் ஆதார வைத்தியசாலையில் விசேட நீதித்துறை வைத்திய அதிகாரி டபிள்யூ.எஸ்.கே.ஆர் திரு விக்ரமராச்சி மேற்கொண்ட பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தியுள்ளார்.
சிறுமியை பாம்பு தீண்டியதாக குறிப்பிட்டு, கடந்த 16ஆம் திகதி தாயார் வைத்தியசாலையில் அனுமதித்தார். உ யிருக்கு ஆ பத்தான நிலையிலிருந்த சிறுமி, வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
சிறுமியின் இறப்பில் சந்தேகம் ஏற்பட்டதனை தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை தகவல்கள் வெளியாகின. சிறுமி தங்கியிருந்த புத்தளம் ஆசிரிகம தனியார் தென்னந் தோட்டத்தில் பொலிசார் நடத்திய சோதனையில் இரத்தக்கறை படிந்த ஆடைகள் புதைக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக இறந்தவரின் தாய் மற்றும் இரண்டு தம்பிகளை பொலிசார் விசாரித்தனர். இதன்போது தாயாரின் கள்ளக்கா தலனால் சிறுமிக்கு நடந்த கொடுமை தெரிய வந்ததுள்ளது.
தென்னந்தோட்டத்தை மேற்பார்வையிடும் இளைஞனுடன் சிறுமியின் தாயார் கடந்த 8 மாதங்களாக கள்ளக்காதல் தொடர்பை பேணி வந்துள்ளார். அந்த நபரே சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார். சிறுமியின் தாயாரும் அதற்கு உடந்தையாக இருந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
சி றுமியிடம் தகா த முறையில் நடந்துகொண்டதால் சி றுமிக்கு அ திக இ ரத்தப் போ க்கு ஏ ற்பட்டது. எனினும், சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்காமல் வீட்டிலேயே வைத்திருந்துள்ளார் தாயார்.
சிறுமியின் உ டல்நிலை மோ சமாகி, நி னைவிழக்க ஆரம்பித்த பின்னரே வைத்தியசாலையில் அனுமதித்தார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் சிறுமியின் தாயாரின் க ள்ளக்கா தலர் த லைம றைவாகியுள்ளார். குறித்த நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.