இலங்கை
இலங்கையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணம் செய்யத் தடை!

இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் எதிர்வரும் 30ஆம் திகதிவரை அமுலாகவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் மே மாதம் 30 ஆம் திகதி வரையில் இவ்வாறு போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தியவசிய சேவைகளுக்கு இந்த போக்குவரத்து கட்டுப்பாடு அமுலில் இருக்காது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நாட்டின் நிலமையை கருத்திற்கொண்டு மாவட்டங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.