இலங்கை

இரா. சம்பந்தனின் இறுதிக்கிரியைகள் – இறுதி அஞ்சலி செலுத்தினார் ரணில்! அக்கினியுடன் சங்கமித்தது சம்பந்தனின் பூதவுடல்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மறைந்த இரா. சம்பந்தனின் இறுதிக்கிரியைகளில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அன்னாரின் பூதவுடல், மக்களின் அஞ்சலிக்காக திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கபட்டுள்ளது.

அவரின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க இன்று மாலை திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ளார்.

மேலும் அன்னாரின் பூதவுடலுக்கு அரசியல்வாதிகள், பிரமுகர்கள் மற்றும் மக்கள் அஞ்சலி செலுத்தி இருந்தார்கள்.

அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னா் திருகோணமலை இந்து மயானத்தில் தகனக் கிாியைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடன் இன்று மாலை அக்கினியுடன் சங்கமமானது.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker