ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் நான்காம் நாள் திருவிழா (படங்களும் இணைப்பு)

படங்கள் : -அபிராஜ் –

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழா செவ்வாய் (2019.09.03) அன்று பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகி மறுநாள் புதன்கிழமை (04.09.2019) திருக்கொடியேற்றப் பெருவிழா அன்னதான நிகழ்வு இரவுநேர திருவிழா என முதலாம் நாளுக்கான நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தது.

மேலும் நேற்றய (07.09.2019) நான்காம் நாளுக்கான காலை நிகழ்வு திருவிழா காலை 8.00 மணியளவில் ஆரம்பமாகி அதனைத்தொடர்ந்து அன்னதான நிகழ்வு அமரர்.இ.கோபாலபிள்ளை குடும்பத்தினரினால் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

மேலும் இரவுநேர திருப்புகழ் பராயணத் திருவிழா மாலை 06.00 மணியளவில் திரு.சி. வேலாயுதம் போடியார் குடும்பத்தினர் பங்களிப்புடன் இடம்பெற்று நான்காம் நாளுக்கான நிகழ்வு இரவு 11.00 மணியளவில் இனிதே சிறப்பாக நிறைவடைந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker