இலங்கை

இந்தியாவில் பரவும் ஆபத்தான கொரோனா வைரஸ் இலங்கையிலும் கண்டுபிடிப்பு!!

இந்தியாவில் பரவும் மிகவும் ஆபத்தான கோவிட் வைரஸ் இலங்கையிலும் ஒருவர் மீது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர் ஒருவருக்கு மேற்கொண்ட பரிசோதனை மாதிரிகளில் B1.617 என்ற வகை வைரஸ் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவரின் பரிசோதனை மாதிரியிலேயே இவ்வாறு புதிய வகை வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த ஒருவருக்கே முதன் முறையாக இந்த வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker