இலங்கை

இன்று முதல் மூன்று தினங்களுக்கு விசேட விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானம்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்காக மூன்று தினங்களுக்கு விசேட விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரையில் விசேட விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

வங்கிகள், சுகாதாரம், உணவு விநியோகம், போக்குவரத்து, மாவட்ட செயலாளர் காரியாலயங்கள், பிரதேச காரியாலயங்கள், அத்தியாவசிய சேவை தவிர்த்த அரச கூட்டுதாபன திணைக்களங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்த பொது விடுமுறை அமுலாகும் என்பதோடு தனியார் நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கமைய, இந்த விடுமுறையை நீடிப்பதற்கு அல்லது நீடிக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker