உலகம்

இந்தியாவில் ஒரே நாளில் 15,413 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 26 ஆயிரத்தைக் கடந்தது

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 15,413 பேருக்கு கொரோனா வைரஸ்  தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 26 ஆயிரத்து 910 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் புதிதாக 15,413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வைரஸ் தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 306 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 13,703 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம் இந்த தொற்றுக்கு உள்ளான ஒரு இலட்சத்து 75 ஆயிரத்து 955 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதேநேரம் 2 இலட்சத்து 37 ஆயிரத்து 252 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களான மகராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதற்கமைய இந்த வைர் காரணமாக மகராஷ்டிராவில் இதுவரை ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, 5,984 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் தமிழகத்தில் 56 ஆயிரத்து 845 பேர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு,  704 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker