இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு படிப்பும் பண்பும் இருக்க வேண்டும் – விக்னேஸ்வரன்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓரளவு படிப்பும் சிறந்த பண்பும் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

மேலும், 1956 தொடக்கம் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பலர், பணம், படிப்பு, பண்பு ஆகியவற்றைத் தெரியாதவர்களாக இருந்ததாகவும் இதன் காரணத்தினாலேயே அரசியலானது மாற்றம் உற்றது எனவும் சுட்டிக்காட்டினார்.

எனவே தற்போதுள்ளவர்கள் பணபலம் இல்லாவிட்டாலும் ஓரளவு படிப்பும் பண்பும் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என கூறினார்.

மேலும் தேர்தலுக்காக பாரிய தொகையை செலவு செய்யும் பிரதிநிதிகள், அதை திருப்பிப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்போதே ஊழல் சமூகத்தில் மலிந்து காணப்படுகின்றமைக்கு காரணம் என்றும் கூறினார்.

இதன் பின்னர் சாதி, மதத்தை பயன்படுத்தி மேலும் பணம் சம்பாதிக்கவும் அவர்கள் முயற்சி செய்வதாக குற்றம் சாட்டிய அவர், இதனால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி அவர்கள் கண்டுகொள்வதில்லை என்றும் கூறினார்.

இதனால் எமது உறுப்பினர்கள் சுய சிந்தை அற்று நடக்கத் தலைப்படுகின்றனர். இவையாவும் சேர்ந்தே அரசியல் ஒரு சாக்கடை என்ற பெயரைப் பெற வைத்துள்ளன என சுட்டிக்காட்டினார்.

ஆனால் தான் சாக்கடையின் விளிம்பில் நின்று அதில் தள்ளிச் செல்லப்படும் அசுத்தங்களை அவதானித்துக் கொண்டு இருக்கின்றேன் என்றும் இதுவரையில் அந்த அசுத்தத்தில் காலடி எடுத்து வைக்கவில்லை என்றும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker