இலங்கை

இணைந்த கரங்கள் அமைப்பினால் ஒந்தாச்சிமடத்தில் 150 வருடத்திற்கு மேற்பட்டதாக கூறப்படும் பாரதி பாலர் பாடசாலை புனரமைப்பு….

150 வருடத்திற்கு மேற்பட்டதாக கூறப்படும் ஒந்தாச்சிமடம் பாரதி பாலர் பாடசாலையை மீள் புனரமைப்பதற்க்காக ஒந்தாச்சிமடம் விளையாட்டு கழகம் மற்றும் சமூக நலன் விரும்பிகளாலும் உதவி கோரப்பட்டிருந்தமையைத் தொடர்ந்து.

நேற்றய தினம் (21) பி. ப.2.30 மணியளவில் பாடசாலையின் அதிபர். திருமதி.வி.அமிர்தகலா அவர்களின் தலைமையில் குறித்த்த நிகழ்வு இடம்பெற்றது.

இணைந்த கரங்களோடு இணைந்து பயணிக்கும் கொடையாளர்களான
கனகராஜ் நடராசமணி குடும்பம், திரு.தினேஸ்ராஜ், ஜனபாலசந்திரன் குடும்பத்தினரின் நிதி
உதவியுடனும் மற்றும் இணைந்த கரங்கள் உறவுகளின் நிதி உதவியுடனும் புனரமைக்கப்பட்டு, மாணவர்களின் கல்வி செயற்பாட்டுக்காக பிரதம அதிதியாக கலந்துகொண்ட ந. கனகராஜ் அவர்களின் கரங்களினால் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் இன் நிகழ்வில் அப்பிரதேச கிராம சேவை உத்தியோகத்தர் திரு.க. சுரேஸ், ஒந்தாச்சிமடம் விளையாட்டுக்கழக தலைவர் திரு.ச.சிரஞ்ஜிவி, கழக உறுப்பினர்கள், அறநெறிப் பாடசாலையின் அதிபர், ஆலய பிரதிநிதிகள், கிராம சமூக சேவையாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், இணைந்த கரங்கள் உறவுகளான ந.கனராஜ் லோ.கஜரூபன், சி.காந்தன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker