இணைந்த கரங்கள் அமைப்பினால் வீரச்சோலை பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…..

கமு/சது/வீரச்சோலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் (85) மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை,பாதணி என்பன வழங்கும் நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திரு.அந்தோனி சுதர்சன் தலைமையில் (18/08/2023) நேற்றய தினம் பாடசாலையில் இடம்பெற்றது.
இணைந்த கரங்கள் அமைப்பு உறவுகளின் நிதி பங்களிப்போடும் மற்றும் மில்ரோகித் ராஜ்குமார் அவர்களின் நிதி பங்களிப்புடன் இணைந்து இம் மாணவகளுக்கான கற்றல் உபகரணங்கள், பாதணி மற்றும் புத்தகப்பைகள் என்பன மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்படது.
இன் நிகழ்வில் முன்னாள் பாடசாலையின் அதிபர் திரு. இ. தியாநிதி, திருமதி. ராஜ்குமார் ஜெயச்சித்திரா ஆகியோர் அதிதிகளாகவும் மேலும் பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
மேலும் இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான காந்தன், சுரேஷ் ஆகியோரினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை, பாதணிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.