இலங்கை
இணைத்தகரங்கள் அமைப்பினால் திருகோணமலை மாவட்ட முதூர் பிரதேச முன்னம்போடிவெட்டை அரசினர் தமிழ் கலவன் வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு….

திருகோணமலை மாவட்ட முதூர் பிரதேச முன்னம்போடிவெட்டை அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 39 மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் மற்றும் புத்தகப்பை வழங்கும் நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திரு.மாணிக்கம் இளங்கோ அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
மேலும் இன் நிகழ்வில் இணைத்தகரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான எஸ். காந்தன் சி.துலக்சன் நா.சனாதனன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை வழங்கி வைக்கப்பட்டது.