விளையாட்டு

ஆஸி பந்து வீச்சாளர்கள் அபாரம்: முதல் ரி-20 போட்டியில் இலங்கை அணி தோல்வி!

இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், அவுஸ்ரேலியா அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 20 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில்,1-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியா அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

சிட்னி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பென் மெக்டர்மோட் 53 ஓட்டங்களையும் மார்கஸ் ஸ்டொயினிஸ் 30 ஓட்டங்களையும் ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளையும், துஸ்மந்த சமீர, சமிக்க கருணாரத்ன மற்றும் பினுர பெனார்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பெற்றுக்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து 150 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி, களமிறங்கிய போது அவ்அப்போது மழைக்குறுக்கிட்டது. இதனால், இலங்கை அணிக்கு ஓவர்கள் 19 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு 143 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்படி களமிறங்கிய இலங்கை கிரிக்கெட் அணியால், 19 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், அவுஸ்ரேலியா அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 20 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பெத்தும் நிஸங்க 36 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஜோஸ் ஹெசில்வுட் 4 விக்கெட்டுகளையும் ஆடம் செம்பா 3 விக்கெட்டுகளையும் பெட் கம்மின்ஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டி, நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) சிட்னியில் நடைபெறவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker