ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் “அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு” எனும் தொனிப்பொருளின் விழிப்புணர்வு ஊர்வலம்….

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு “அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு” எனும் தொனிப்பொருளின் கீழ் கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை (18/10/2022) காலை 08.00 மணியளவில் பாடசாலை அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமுர்தலிங்கம் அவர்களின் தலமையில் பாடசாலை நூலக பொறுப்பாளர்களான S. A.C.M. றமின், திரு.சி.சிறிக்காந்தன், திருமதி.கோ.கிரியாழினி ஆகியோரின் ஏற்பாட்டிலும் பாடசாலை பிரதி அதிபர்களின் வழிகாட்டலிலும் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது.
ஊர்வலமானது கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் நூலகத்தில் இருந்து மாணவர்கள் வாசிப்பு வாசகங்களை ஏந்தியவாறு பாடசாலையை அன்மித்த பாதையின் ஊடாக அக்கரைப்பற்று பிரதேச வாழ் பொதுமக்களுக்கு வாசிப்பின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் வண்ணம் விழிப்புணர்வு மிக்கதாக மிகசிறப்பானதாக இடம்பெற்றது.
குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் நூற்றுக்கானக்கான மாணவ,மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என பலரும் பங்குபற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.