இலங்கை
நாட்டில் மேலும் 406 பேருக்கு கொரோனா- மொத்தம் 39,000ஐ கடந்தது!

நாட்டில் மேலும் 406 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்களில் 388 பேர் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் எனவும் ஏனைய 18 பேரும் சிறைச்சாலைக் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 45ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 686 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 30 ஆயிரத்து 568 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இன்னும் எட்டாயிரத்து 293 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 184 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது