கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர் உறவுகளின் பங்களிப்புடன் ஒரு தொகுதி உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு…

வி.சுகிர்தகுமார்
கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக அம்பாரை மாவட்டத்தின் பின்தங்கிய பல கிராம பெண் தலைமைத்துவ குடும்பங்கள் வாழ்வாதார ரீதியில் பல நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவ்வாறு நெருக்கடிகளை சந்தித்துவரும் கிராம பெண் தலைமைத்துவ குடும்பங்களளுக்கு தனியார் தொண்டு நிறுவனங்களும் அமைப்புக்களும் முடிந்தவரை உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி மக்களுக்காக ஜேர்மன் நாட்;டின் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் மற்றும் ஜேர்மன் சொப்ட் இளைஞர் அமைப்பின் நிதி அனுசரணையில் பெறப்பட்ட 2500 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகளை அக்கரைப்பற்று அன்புக்கரங்கள் அமைப்பினர் இன்று வழங்கி வைத்தனர்.
அமைப்பின் தலைவர் சு.சிறிதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் கே.லவநாதன் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுவாகர், கணக்காளர் க.கேசகன், நிருவாக உத்தியோகத்தர் கே.சோபிதா கிராம உத்தியோகத்தர் சி.அருள்ராஜா ஆகியோரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற நிவாரணப்பணியில் அக்கரைப்பற்று அன்புக்கரங்கள் அமைப்பினர் கலந்து கொண்டு உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்தனர்.
பிரதேச செயலக கலாசார மண்டபத்;தில் சமூக இடைவெளியை பேணும் வகையில் இடம்பெற்ற நிவாரணம் வழங்கும் பணியில் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பெண்கள் கலந்து கொண்டு நிவாரணப்பொதியை பெற்றுக்கொண்டதுடன் நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் இடம்பெற்றுவரும் நிவாரணப்பணியில் புலம்பெயர் உறவுகளின் பங்கு மகத்தானது என தெரிவித்தார்.
மேலும் வழங்கப்பட்டுள்ள நிவாரணங்களில் 75 வீதத்திற்கும் மேற்பட்டவை புலம்பெயர் உறவுகளின் பங்களிப்போடு இடம்பெற்றுள்ளதையும் நினைவூட்டிய அவர் எதிர்காலத்திலும் இவர்களது உதவிக்கரம் எமது மக்களின்பால் நீட்டப்படவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அத்தோடு இப்புனிதப் பணியை முன்னெடுத்துவரும் அன்புக்கரங்கள் அமைப்பிற்கும் நன்றி தெரிவித்தார்.